நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 500,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது. 30 இலட்சத்திற்கும் அதிகமாக பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு, பாதுகாத்து மின்நூலகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல பல்கலைகழகங்களுடன் இணைந்து பணிபுரிகிறது.