நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 500,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது. 30 இலட்சத்திற்கும் அதிகமாக பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு, பாதுகாத்து மின்நூலகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல பல்கலைகழகங்களுடன் இணைந்து பணிபுரிகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பயணம் என்பது பல நிறுவனங்களின் மானியங்கள், நன்கொடையாளர்கள், பெருநிறுவனங்களின் சமூகக் கடமை திட்டங்கள்(CSR), தனிநபர்களின் நன்கொடைகள் முதலியவற்றின் ஆதரவால் சாத்தியமானது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளைக்கான நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 80G பிரிவின் கீழ் 50% வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிவு வளாக கட்டட நிதிக்கான நன்கொடைகளை காசோலை, இணைய பரிமாற்றங்கள் அல்லது கீழே உள்ள இணைப்பு மூலம் வழங்கலாம்.