Banner
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

அமரர் ரோஜா முத்தையா 50,000 நூல்களும் இதழ்கள், திருமண அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், துண்டறிக்கைகள் போன்ற பிற 50,000 ஆவணங்களையும் சேகரித்திருந்தார். அவர் நினைவாக இந்நூலகத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா, எழுத்துப் பலகை எழுதும் ஓவியராவார். 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட அவரது அகால மரணத்திற்குப் பிறகு, அவரது சேகரிப்பைக் காப்பாற்ற உலகளாவிய முயற்சியை சிகாகோ பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அச்சேகரிப்புகள் சென்னைக்கு மாற்றப்பட்டு, 1994ஆம் ஆண்டு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இச்சேகரிப்பைப் பராமரிப்பதற்கான சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது, தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, நூலகம் விரிவுப்படுத்தப்பட்டது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பல நூல் பாதுகாப்புத் திட்டங்களை - National Endowment for the Humanities, Ford Foundation, Wellcome Trust for the History of Understanding Medicine, Endangered Archives Project, TATA Trusts, India Foundation for the Arts, National Archives of India, Tamil Nadu Government உள்ளிட்ட நிறுவனங்களுடனும் சில தனிநபர்களுடனும் இணைந்து மேற்கொண்டது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சேகரிப்பு, நூல்பட்டியல், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளிலிருந்து நூல்களை எண்ணிமமாக்குதல், பொது ஆய்வுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தன்னை விரிவாக்கியது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 2007ஆம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தையும் 2021ஆம் ஆண்டு பொதுவியல் ஆய்வு மையத்தையும் நிறுவியது.

தற்போது தமிழ்நாடு அரசால் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் சில முக்கிய நூலகச் செயல்பாடுகளைத் தக்கவைக்க 2023 முதல் தொடர் மானியங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தமிழின் மரபார்ந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, அறிவுசார் விவாதத்திற்கு பொதுதளத்தில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் செயல்படுகிறது. இந்நூலகம் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறந்த முறைமைகளை உருவாக்கியும் மேற்கொண்டும் வருகிறது.

தமிழ் அறிவு வளாகம் - ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முன்னெடுப்பு
தனது 30 ஆண்டுகால அனுபவத்துடன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மறுதகவமைத்துக் கொண்டு வருகிறது. இம்முயற்சியின் பகுதியாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அனைத்து செயல்பாடுகளும் உள்ளடக்கிய ஒரு தமிழ் அறிவு வளாகம் உருவாக்கப்படும். இச்செயல்பாடு நிறைவுபெற இரண்டு ஆண்டுகளும் ஆகும். முன்மொழியப்பட்ட கட்டிடத்தின் கிழக்குப் பகுதியின் மாதிரி வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிவு வளாகப் பேரவையில் இணைய இங்கே சொடுக்கவும்
தமிழ் அறிவு வளாகக் கட்டத்தின் மாதிரி வடிவம்
வரலாறு

1994

சிகாகோ பல்கலைக்கழகம் கோட்டையூரைச் சேர்ந்த மறைந்த ரோஜா முத்தையாவின் தனியார் சேகரிப்பை வாங்குவதன் மூலம் அதைக் காப்பாற்ற உலகளாவிய முயற்சியை மேற்கொண்டது.
Sample Image

2005

சிகாகோ பல்கலைக்கழகம் இச்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, விலகிக்கொண்டது. இதற்குப் பிறகு, நூலகம் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது.
Sample Image

2007

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஐராவதம் மகாதேவன் சிந்துவெளி ஆய்வு மையம் உருவாக்க ஆலோசனை வழங்கினார்.
Sample Image

2010

தமிழ்நாடு அரசு தற்போதைய இடத்தை, சேகரிப்பை விரிவுபடுத்துவதற்காக நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கியது. இந்நூலகத்தில் மு. அருணாச்சலம், தஞ்சை பிரகாஷ், தெ.போ. மீனாட்சி சுந்தரம், சூசன், லாயிட் ருடால்ப், சிகாகோ பல்கலைக்கழகம் போன்ற குறிப்பிடத்தக்க சேகரிப்புகள் நூலகத்தின் பகுதியாக மாறின.
Sample Image

2015

நவாஜ்பாய் ரத்தன் டாடா அறக்கட்டளை நூல்களைப் பாதுகாப்பதற்கு ஒரு முழு அளவிலான பாதுகாப்புக்கூடம் அமைக்க மானியம் வழங்கியது.
Sample Image

2019

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தனது முதல் நூலான ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ நூலின் ஆங்கிலப் பதிப்பு நூலை வெளியிட்டது.
Sample Image

2021

நவீன தமிழ்நாட்டையும் அதன் சமூக மாற்றத்தையும் ஆராய்வதற்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பொதுவியல் ஆய்வு மையம் என்ற புதிய ஆய்வு மையத்தை நிறுவியது.
Sample Image

2023

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெளியிட்ட, ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ நூலின் தமிழ்ப் பதிப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
Sample Image
குழு
அறங்காவலர் குழு
எம். ஆறுமுகம்
தொழில் முனைவோர்
ஆர். பாலகிருஷ்ணன்
குடிமைப் பணியாளர் (ஓய்வு)
மனுராஜ் சண்முகசுந்தரம்
வழக்கறிஞர்
மரியம் ராம்
நூல் வெளியீட்டாளர்
பி.ஜி. ராஜேந்திரன் (இந்திரன்)
எழுத்தாளர், கலை விமர்சகர்
ஆர். ராமசந்திரன்
தணிக்கையாளர்
ரமணி நடராஜன்
அரசியலமைப்பு வழக்கறிஞர்
யு. சுதிர் லோதா
கல்வியாளர்
சுந்தர் கணேசன்
ஆவணக்காப்பாளர், (நிறுவனர் அறங்காவலர்)
சு. தியோடர் பாஸ்கரன்
திரைப்பட வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், (நிறுவனர் அறங்காவலர்)
ஊர்வசி புடாலியா
எழுத்தாளர், நூல் வெளியீட்டாளர்
இயக்குநர்கள்
  • முனைவர். சுந்தர் கணேசன், 2005 முதல்
  • சு. தியோடர் பாஸ்கரன், 1998-2001
  • ப. சங்கரலிங்கம், 1994-1997
துறைத் தலைமையாளர்கள்
  • ஆர். பாலகிருஷ்ணன், மதிப்புரு ஆலோசகர், சிந்துவெளி ஆய்வு மையம்
  • ஏ.எஸ். பன்னீர்செல்வன், தலைவர், பொதுவியல் ஆய்வு மையம்
  • ஆர். விஜயசங்கர், இயக்குநர், ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்
  • இரா. பிரகாஷ், நூலடைவு மற்றும் நூல் பாதுகாப்பு மையம்
ஆலோசகர்கள்
  • பா. காந்தி
  • முத்து நெடுமாறன்
பணியாளர்கள்
  • எஸ். முத்து மாலதி, துணை இயக்குநர்
  • எம். மணிகண்ட சுப்பு, துணை இயக்குநர்
  • இ.கே. மோகன், மூத்த தொழில்நுட்ப உதவியாளர், நூல் பாதுகாப்பு பிரிவு
  • ஏ. சத்தியமூர்த்தி, மூத்த தொழில்நுட்ப உதவியாளர், படியெடுப்பியல் பிரிவு
  • எம். ரவி, மூத்த தொழில்நுட்ப உதவியாளர், படியெடுப்பியல் பிரிவு
  • C. நரேஷ், தொழில்நுட்ப உதவியாளர், படியெடுப்பியல் பிரிவு
  • கே. தங்கம், தொழில்நுட்ப உதவியாளர், உசாத்துணைப் பிரிவு
  • முனைவர் சே. தனபால், ஆராய்ச்சி உதவியாளர்
  • ரஞ்சித் ரூஸோ, குழுத் தலைமை, தமிழ் எழுத்துருக் கூடம்